search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மாயம்"

    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
    • ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவி. இவர் நல்லானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து ஜெராக்ஸ் எடுக்க சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தப்பூட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு தூங்க சென்ற மாணவி காலையில் காணவில்லை.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், பி.குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோட்டப்பட்டி அருகே உள்ள பயர்நாயக்கம்பட்டியில் உள்ள தாய்மாமா வீட்டில் தங்கி நரிப்பள்ளி யில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 28-ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரித்த போது ஆசிரி யர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாணவியின் கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் தருமபுரி மாவட்டம் நவலை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி.

    இவர் பாப்பாரப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 26-ம் தேதி கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் கம்பை நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் சுந்தரையா தெருவை சேர்ந்தவர் நிவேதா (22). இவர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரவு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை.
    • பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலாமேரி. பி.காம் பட்டதாரி. இரவு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து இவருடைய அப்பா கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • ருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).
    • பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).

    இந்த நிலையில் ஜெயலட்சுமியின் தாய் பாப்பா தனது பேத்தி பூர்ணிமா மற்றும் பேரன் தர்ஷன் ஆகிய இருவரையும் தனது பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    அதன் காரணமாக நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி காலை பயிற்சி வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சமத்துவபுரம் 4 ரோட்டில் தனியார் பஸ்சில் ஏறி பயிற்சி வகுப்பு சென்றுள்ளார்.

    ஆனால் இரவு வெகு நேரமாகியும் பூர்ணிமா வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி பாப்பா தனது உறவினர்கள் வீட்டிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து பாப்பா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து பூர்ணிமா தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவரேனும் பூர்ணிமாவை கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேசென்றார்.
    • மாலையில் நீண்டநேரமாகியும் சிறுமி திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சிறுமியின் தந்ைத திருப்பூரில் உள்ள டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இதன்காரணமாக சிறுமி கம்பைநல்லூர் அருகே போளையம்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேசென்றார். மாலையில் நீண்டநேரமாகியும் சிறுமி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • ராஜஸ்ரீ கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார்.
    • அருள் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே செம்மேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 18) கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 7-ம்தேதி பண்ருட்டியில் உள்ள டைப்ரைட்டிங் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்ரீயின் பெற்றோர் இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் ராஜஸ்ரீ கிடைக்க வில்லை. இதுகுறித்து ராஜஸ்ரீயின் தந்தை ராமமூர்த்தி காடாம்புலியூர் போலீசில் மணப்பாக்கத்தை சேர்ந்த அருள் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் கொடு த்தார். புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அருளை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    நேற்று வழக்கம்போல் நித்யஸ்ரீ கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவ ரவில்லை. தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நித்யஸ்ரீ (வயது21). இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் நித்யஸ்ரீ கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவ ரவில்லை.

    இதுகுறித்து செல்வம் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நித்யஸ்ரீயை தேடிவருகின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி பெரியாம்பட்டி ஹாப்பிநகரைச் சேர்ந்த 20 வயது மாணவி. இவர் தருமபுரி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    ஆனால் மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி தே.மாரியம்மன் கோவில் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி. இவர் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி அலுமேலுபுரம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் திவ்யா (19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஏற்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2-ந் தேதி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற திவ்யா சுப்ரமணியின் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை.
    • பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர்

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பறையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி தனது குடும்பத்துடன் மலையனூரில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த அனைவரும் தூங்க சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீட்டிற்கு திரும்பிரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வெளியே செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பிரவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டை மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஓசூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×